Smileஅழுதுவடியும்
விளக்கு
தோற்றுப்போகிறது
இருளிடம்

எங்கும்
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது
இருள்
தன்னை.

ஒளியற்றவெளியில்
பதுங்கிக்கிடக்கும்
உன்
புன்னகை
ஒரு திருட்டுப்பூனையைப்போல்
நுழைகிறது
கனவுகளில்..

அதன்
கால்களில்
இடறி
கறிச்சட்டியைப்போல்
நொறுங்கும்
என் தூக்கம்

த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It