திரும்ப திரும்ப
அடித்துக் கொள்கிறான்
வலி சகித்து
படையலுக்குமுன்
திருடித் தின்றதற்காய்
அப்பாவின் சாட்டை பேசியது
நினைவில்
கன்றி நிற்கும் தேகம்
இரத்தக் கசிவோடு
புரையோடிப்போன
புண்களில்
அடிகளின் சரித்திரம்
விரட்டும் பாதங்கள்
தெய்வத் திருவடியென
தொழுகிறான்
மீண்டும் மீண்டும்
இத்தனைக்கும் பிறகும்
கை விரிப்பவர் மீதான
கோபத்தை
தன் மீதே காட்டுகிறான்
மற்றுமொருமுறை
சவுக்கை வீசி
- மாறன்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...