Lady



நான் இல்லாவிட்டால் என்ன
உனக்கு வேறு நல்ல பெண்
கண்டிப்பாக கிடைப்பாள் என்கிறாயே,
உன் கவிழ்ந்த தலையை
குனிந்து பார்த்தே
கூனனாகிப் போனவன் நான்
உன் விழியின் கவிதையைக்
கேட்க நினைத்தே
செவிடனாகிப் போனவன் நான்
உன் இதழின் வரிகளை
உற்றுப் படித்துப் படித்தே
குருடனாகிப் போனவன் நான்
இப்படி இருக்கும் என்னை
யாரடி திருமணம் செய்வாள்? 

புத்தொளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It