கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- மாறன்
- பிரிவு: கவிதைகள்
வளையல்
தங்க வளையல் கேட்டு
தாம்பத்யத்தில்
தர்ணா நடத்துகிறாள்.
வளைய வளைய வந்தாலும்
வளையல் இல்லாவிடில்
முழுமை பெறாது
அழகென்பதை
ஒப்புக்கொள்கிறேன்
கண்ணாடி வளையலுக்குக்
கிடைக்கின்ற மவுசு
எப்போதும் வாய்ப்பதில்லை
முன் ஜென்மத்தில்
சாபம் பெற்ற
பிளாஸ்டிக் வளையல்களுக்கு
வளைகாப்பு நடத்தப்படாது
குழந்தை ஈன்றவளின்
மனக்குறை
மண்ணுக்குப் போகும்வரை
மறைந்ததாய் பேச்சில்லை
ஒரு கட்டியணைப்பின்போது
வளையல்கள் சிதறி
இரத்தம் கசிந்ததை
சந்திக்கும்போதெல்லாம்
மறக்காமல் சொல்வாள்
மறந்து சென்ற காயத்ரி
அனைவருக்கும் பிடித்த
அன்பான வளையல்கள்
அசிங்கப்பட்டுப் போவது
கணவனை இழந்தவளின்
கைகளிலிருந்து
உடைக்கப்படும்போதுதான்
- மாறன்