manதென்குமரிச் சீமையிலே

எந்த இனமென்று
துறவியை ஏன் கேட்கிறாய்

மதத்தலைவனோ.. மண்ணின் தலைவனோ
போரிடும் வீரனோ.. புகழுடை மனிதனோ
யாவரும் தேடிடும் கருப் பொருள் ஒன்று தான்

தச்சன் கண்ட கடவுளை சில நேரம்
துறவியும் கண்டதில்லை
முடித்திருத்துவோன் கண்டதை பலநேரம்
முனிவனும் அறிந்ததில்லை

இந்துவோ முஸ்லீமோ
தேடியதும் அடைந்ததும்
ஒன்று தான்
அடைந்ததை அறிந்திட
தெரிவதெல்லாம்
வெறுமையல்லவா ?


ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 
Pin It