ஒட்டிய வயிறு
கையேந்தும் விழியில்லா முடவன்.
இரக்கமற்ற பல இதயங்கள்.
நீள்கிறது ஒரு கை...
'இந்தா! உனக்கு ஒன்று
எனக்கு ஒன்று'
யாசித்தவனிடம் கொடுத்து விட்டு
பிறிதொரு ஈரவிழி தேடுகிறான்
ஒற்றைக்கண் பிச்சைக்காரன்.
வெட்கித் தலை குனிகிறது
பேருந்துக்காக காத்திருக்கும்
ஜனங்களின் மனங்கள்...


சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It