இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.

இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.

ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது.

மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்

நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.

நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It