கருகிப்போன உயிர்ச் சருகின்
சாம்பலில் பூக்கின்றன
உன் நினைவுத் துளிகள்.
என் அழகான தனிமை
கிழிக்கப்படுகிறது உன்னால்...
மெளனத்தின் வார்த்தைகளெல்லாம்
கேட்கப்படுவதேயில்லை.
அதிகாலைப் பனித்துளிக்காய்
நடு இரவிலேயே
விழித்துக் கொள்கிறது மனசு.
விடிந்தது புரியாமலேயே
இமைகளுக்குள்
சுருண்டு விடுகிறது உறக்கம்.
துடிப்பதை மறந்து போன இதயம்
தற்போதெல்லாம்
ரகசியமாய் விசும்பிக்
கொண்டிருக்கிறது.
புதிதாய் வெடித்த
உன் நினைவுகளோடு...


சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It