இறைச்சிக்கடை
ஓநாய் கூட்டம்
கண்கள் வெறிக்கும்
கண்களே கூறுபோடும்
கண்கள் பார்க்கும்
கண்களே முகரும்
கண்கள் நக்கும்
கண்களே கடிக்கும்
கண்கள் சுவைக்கும்
கண்களே விழுங்கும்
தன்முறைக்காக
தவிக்கும் விஐபி
ஆட்டின்
அலறல் மட்டும்
கேட்காது
அருகில் இருக்கும்
அந்தக் காது.

மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It