Deathமழைக்கால முடிவின் விபரீதம் அது.

மழையின் நீளக்கரங்களில்
தன்னுடல் சரித்தது பெருமரம்
வேர்கள் வெளிச்சம் கண்டதும்
கூசின; மரண பீதியில் உலர்ந்துவிட்டன.

மெளனமாய் இருவர் வந்து
ரம்பத்தால் அறுக்கத் தொடங்கினர்;
ஒருவன்
தந்தையின் மரணப்படுக்கையில் அருகிலிருந்ததை
நினைத்தவாறே...

மற்றவன்
கூடலுக்குப் பின் முகம் கோணி அழுத
மனைவியை நினைத்து வெட்கித்தவாறே...

பிணத்தை மொய்க்கும் பறவைகளின் பேரோலம் படர
மரம் இரண்டாய்ப் பிளந்தது

குட்டி ரேவதி
Pin It