Manநேற்றைப்போலில்லை!

கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு

வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்!

இரத்தம் வெளிறி
உறைந்துக் கிடக்கின்றன
இரவு பகல்கள்

பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை!

காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.

நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!


இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It