ஐந்து விரல் நுனிகளிலும்
மைப்புள்ளியிட்டு
வரைந்த பொம்மைகள் சிரிக்கின்றன

சாப்பிட அழைத்தும்
கை கழுவ உத்தரவிட்டும்

பிடிவாதமாக மறுக்கிறாள்
பாவம் பொம்மைகள் என்று..

' அவைகளுக்கும் நீ உணவு ஓட்டலாம்..
வா சாப்பிடு..' - என்ற
அம்மாவின் சாமர்த்தியத்தை

விழிகள் கலங்க.. உதடு பிதுங்க
எளிமையாக மறுக்கிறாள்..

' வேணாம்மா... அதுங்க செத்துடும்..! '

-இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It