Girlமங்கல மேளம் முழங்கிட
சுற்றமும் நட்பும் சூழ்ந்திட
ம்ந்திர வேதங்கள் ஒதிட
மங்கல நாண்
மாங்கல்யமாய் கழுத்தில்

இருபது ஆண்டுகளாய்
வீட்டில் துள்ளிதிரிந்து
பாவாடை தாவணியில்
பள்ளிக்கு சென்றுவந்து

அம்மாவிடம் வாயடித்து
அப்பாவால் அரவணைத்து
கூடப்பிறந்தவர்களிடம்
சண்டையிழுத்து
தோழிகளுடன் ஊரைசுற்றி
பாவாடைசிட்டாய் சிறகடித்த

திருவளர்செல்வி
திருமணமாகி திருமதியாய்
மாமியார் வீட்டுக்குள் - என்
தாவணியும் சுதந்திரமும்
ஒரே சிறைக்குள்.

பெட்டிப்படுக்கை புதிய
சீர்வரிசை சீதனங்கள்
கையில் எடுத்துக் கொண்டு
புதிய வாழ்க்கைக்குப் பயணங்கள்

அம்மா அப்பாவைப் பார்க்க
அவரைத்தான் கேட்கனும்
தோழிகளுடன் பேச
அவரைத்தான் கேட்கனும்,

கோவிலுக்குப் போக
மாமியாரை கூப்பிடனும்
அங்குமிங்கும் போக
நார்த்தனாரை கூப்பிடனும்

மகளாய் பிறந்தவள்
ம்ருமகளாய்இடம் பெயர்ச்சி
இது பெற்றோர்களுக்கு
தரும் மகிழ்ச்சி.

நாடு விட்டூ நாடுபோனோர்
கிரகம்விட்டு கிரகம் போனோர்
திரும்பிவரலாம் - நான்
திரும்பிவந்தால்
என் பெயர் வாழாவெட்டி.

ராஜகுமாரன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It