Nightஉருவமில்லாதது
பிறந்த, நாளின் இறப்பு
விடிந்த பொழுதின் மறைவு

ஆம்
இரவின்
இருளை நான் ரசிக்கிறேன்

தன்னைத்
தானே அறியாதது
யாருக்கும் எதிர்பார்ப்பு
கொடுக்காதது
ஆதவன் ஒளிய
ஆகிய இரவு

இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்

உழைப்பவன் ஓயவும்
கறப்பவன் விழிக்கவும்
காலத்தைக் காட்டும்
நிறமற்ற நேரம்
அது இரவு

இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்

உணர்வுகள்
உறங்கும் நேரம்
ஆசைகள் விழிக்கும்
வேளை
மணமற்ற மலரே
இரவு

இரவின்
இருளை
நான் ரசிக்கிறேன்

சக்தி சக்திதாசன். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It