முள்ளாய்
இமைகளுக்குள்
உறுத்துகிறாய்

இருளும்
ஒளியும்
மங்கித்தெரிய ...

தொட்டிக்குள்
சுருளும் வேராய்
உனக்குள்
என்னைச் சுருக்காதே ...

நீரின்றி
மலரும் செடிபோல
மனதெனது

உனக்கு அழகாகவோ
பிறருக்கு நிழலாகவோ
வாழமுடியாமற் போகலாம்
நான் உடைபடும் போது. 

அ. லட்சுமிகாந்தன்
Pin It