Loverஇங்கெல்லாம் அழகிய பூங்காக்கள்
தன் தரையெங்கும் கொடி பரப்பி
நடைபாதையோரம் பூக்களைச் சூடுகின்றன
மறுபுறம் நீலநீர் தெளிந்த பெரிய குளம்
இரவானால் நிலவையும் நட்சத்திரங்களையும்
போர்த்திக் கொண்டு உறங்காமல்
காற்றை இமைக்கின்றன

இப்பாதையெங்கிலும்
சாந்தம் மிக்க மாலைப்பொழுதொன்றில்
உன் கரங்கள் கோர்த்து நடந்திடும் வேட்கை
மனதின் இருப்புகள் தேக்கிவைத்து முணுமுணுக்கும்
ஓரினிய பாடலைப் போல
என்னுள்ளே உறைந்து கிடக்கிறது
நாம் நடக்கலாம்
மேகங்கள் சலனமற்று அசைவதைப் போல
நீர் மட்டம் தன்னுள் பாதங்களை ஏந்தி நகர்த்தும்
அந்த அன்னப்பறவைகள் போல
உன் கண்ணாடித் தொட்டி மீன்கள் போல
அந்தச் சாரலைப் போல தூறலைப்போல
இன்னும் என்னென்னவோ போல
நாம் நடக்கலாம் என்னோடு வா 

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It