கடிமணம் வாழ்வில்
கட்டாயத் தேவையா
யென்றெல்லாம்
Sad Husbandகடிவாளமிட்ட மனதோடு
ஒத்தையில் இருந்தவனை
ஒருவாறு பேசிச் சரிகட்ட
நான் உட்பட
நண்பர்கள் பலரும்

எடுத்துச்சொன்ன பலவற்றில்
ஏகோபித்த ஒன்று
பின்பகுதி வாழ்க்கையில்
பேச்சுத்துணைக்கென்றாவது
பெண்ணொருத்தி வேண்டுமென்பது.

மணமாகிச் சில
மாதங்கள் கழித்து
எதேச்சையாய் எதிர்ப்பட்டவனிடம்
எப்படிப் பேச்சுத்துணை என்றேன்.

எரிக்கும் பார்வையொன்றை வீசி
எதுகை மோனையாய் சொல்லிப்போனான்:

எப்போதும் பேசிக்கொண்டே அவள்.
எதிர்ப்பேச்சின்றி துணையாய் நான்.

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It