இந்நேரத்திற்கு உலகில்
எத்தனையோபேர் தலையில்
இறங்கியிருக்கக்கூடும்
ஏவுகணைகள்
இரக்கமின்றி
பிய்த்து எறியப்பட்டிருக்கும்
இராக்கியர்களின் இதயங்கள்
கருவறுக்கப்பட்டிருக்கும்
காசாவின் கனவுலகம்
குலை குலையாய்
குதறியிருக்ககூடும்
ஈழத்தில் ஈரல்கள்
இன்னும் அநியாயங்கள் அனைத்திலும்
உன்கையே இருக்குமென்பது அறிந்தே
வெறுக்கும் ஒருகூட்டம் விலகியிருக்கும்
உன் நாட்களை கொண்டாடாமல்
அதற்காகவெல்லாம் கவலைப்படாதே
அடுத்தவன் தலையில் குண்டை போட்டுவிட்டு
நீ சொல்லும் ஆப்பி நீயு இயர்களை
அணுகூடபிசகாமல்
ஆண்டுதோறும் கொண்டாடுவர்
உன் பிள்ளைகள்

கவிமதி, துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It