எவனொருவன் இடர் பட்டிருக்கின்றானோ
சித்திரவதைக்குளாகி இருக்கின்றானோ
எவனொருவன் யுத்த களத்தில்
இழப்புகளை ஏற்படுத்தியும்
இழப்புகளை ஏற்றுக்கொண்டும்
அடிகள் கொடுத்தும் அடி வாங்கியும் இருக்கின்றானோ
எவெனொருவன் தனது காலடிகளை
அளந்து வைத்திருக்கின்றானோ
எவனொருவன்
தனது திட்டங்கள்
தவறாகிப்போகும்போது குழம்பாமலும்
தோல்வியுறும்போது கூச்சப்படாமலும் இருக்கின்றானோ
எவனொருவன் ஒரு பெரியமனிதனைப் போல்
தனது தோல்விகளை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டிருக்கின்றானோ
சீறி வரும் யிரக்கணக்கணக்கான ஈட்டிகளை
மார்பிலேந்தி விழுப்புண்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றானோ
தனது கண்ணீரைப் பற்றி அவமானப்படாமல்
நெஞ்சினை நிமிர்த்தி விண்ணுலகத் தாரகைகளை சந்தித்து இருக்கின்றானோ
அவனுடன் இணைந்து நடக்க விரும்புகிறேன் நான்.
இன்று தொடங்கி
அவனுடன் இணைந்து நடப்பதற்காகவே
என்னுடையது அனைத்தையும் கொடுப்பேன்
அற்பமானதாயினும் மகத்தானதாயினும்.
நின்று நிமிர்ந்து எரியும்
இடைவெளிகளைக் கடப்பதற்காக
பற்களை நெறித்து முட்டிகளை இறுக்கி
சக தோழர்களின் மீதான நம்பிக்கையை தனது
ண்மைமிகு நெஞ்சினில் வரித்துக் கொண்டதனால்
அவனுடன் இணைந்து கைகோர்த்து நடக்க
நீண்டதொரு பயணம் தொடங்க விரும்புகிறேன்.
எந்தவொரு மனிதன்
போராடி சமர் புரிந்து வெற்றிபெற்று
மற்ற மனிதர்களைப் பலவானாய் மாற்றுகின்றானோ
அவனுடன் இணைந்து
நடை பயில விரும்புகின்றேன்.
மூலம் :LIMON ABBOT
புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- புதுவை ஞானம்
- பிரிவு: கவிதைகள்