குளிர் காலையின்
மஞ்சள் வானத்தினூடாக எழும்பி நிற்கும்
உன் தேசம் கடந்துவந்த சூரியன்,
மலைச்சரிவின் எங்கும் பரவவிடுகிறது
இதம் நிறைந்த உன் நேசத்தின் வெம்மைகளை..
இரவெல்லாம் பொழிந்த
என் பிரியம் தாங்கிய பனித்துளிகள்
உருகிச் சொட்டுகின்றன இப்பொழுதில்!
பூக்களுடன் செழித்திருக்கும்
இப்பெருவெளியின் புல்வெளியினூடே
முட்டிகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி
உன்னை நினைத்திருக்கிறேன்
எதிரே தெரியும் மலைப்பாதையில்
தரையிறங்கும் ஆட்டுமந்தையாய்
மென்மையாய் வழிகிறது உன் பாடல்!
நட்புடன்,
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்