காம்பு கழன்று
தரையிறங்கிய பூவிற்கு
செடியின் வாசம்.

***

அந்திக்கருக்கலில்
வந்தமரும்
பறவைக்காக காத்திருந்து
இரவு முழுவதும்
பறவையின் கவிதை கேட்டு
ஆனந்தப்பெருக்கில் ஆழ்ந்து
தூங்கியெழுந்து
பறக்கிறது நான்கு திசையிலும்
கிளை பரப்பிய மரம்.

***

அழகான வெயில்
அழகான மழை
நனைந்து கொண்டுதான்
இருக்கிறது எல்லாமும்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It