நானும் சென்றேன்
என்னோடு அவனும் வந்தான்
பெரிதாய் உருவத்தில் வேறுபாடென்றாலும்
வாழும் முறையில் ஓன்றே
நானும் தெருவில்
அவனும் தெருவில்
என் நாவும் வெளியே நீளும்
அவனது நாவும் வெளியே நீளும்
சில நேரங்களில்
அவன் என்னை வென்றுவிடுவான்
சில நேரங்களில்
நான் அவனை வென்றுவிடுவேன்
எல்லாம்
ஓருவேளை எச்சில் இலைக்காக
ஓவ்வொரு வீட்டின்
முன் வாசலிலும்
அவன் நீண்ட வாலை நீட்டிக் கொண்டும்
நான் நாவை வாலாக நீட்டிக் கொண்டும்
தொங்கவிட்ட படியும்
தெருக்களில் யாசக இரவல் குரைப்புடன்...
- இல.பிரகாசம்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- விவரங்கள்
- இல.பிரகாசம்
- பிரிவு: கவிதைகள்