செய்தொழிந்த காலம்
தவறடிபட்டு சரிய,
மீண்டுமொரு
மின்னல் பற்றி
இயங்க - இயக்க
மனப்படவில்லை மாயங்கள் !!

அன்றிரு பறவைகள்
எச்சமிட்ட மரம் ,
இலைகள் கசக்கி
வெற்றுவேர்களுடன்
காயப்பட்ட சுற்றமாகி ..

இந்நாளின் கடிகாரங்கள்,
காலத்தை
வாழ்வின் திசை திருப்பிவிட்டு..
அதிகப்பிரசங்கக் காதலை
கானல்நீரென்ற
பாலையின் பாடுபொருளாக்கி,
கவிதையொன்றிற்கென
மீட்டுகிறது என்னை..!


-
ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It