அத்தி பழத்தை
குத்தி
கிழித்து
ருசித்து
பறந்தது...

விதை தூவும்
வாகனமாய்
வயிறு புடைத்து
காற்றில் நீந்தியது...

சொத்தென
விழுந்த
விதை
முட்டி
மோதி
தோற்று
மலடாகி
மறித்தது
தார் சாலையில்.

- அ.கரீம்

Pin It