இன்று சித்ரவதை
நாளை அழகு
சிற்பியிடம் மாட்டிய கல்
______________________
கோபுரக் கலசத்தை
அசைத்துப் பார்க்கிறது
குளத்தில் விழுந்த கல்!
______________________
வறுமைக் கோடு
தெளிவாய் தெரிகிறது
விலாவில்!
______________________
சவக் கிடங்கில்
சிரிப்பு எதற்கு?
மின் விளக்கு!
______________________
சூடு ஏற்றுகிறார்கள்
நிச்சயம் அடி உண்டு
பறைக்கு!
______________________
பட்ட மரம்
பூத்திருக்கிறது
காளான்!
______________________
அடி வாங்கியபின்
அணைந்துகொள்கிறது
நெஞ்சோடு பறை!
______________________
அக்கரைக்குச் செல்ல
இலவச படகு
எறும்புக்கு சருகு!
______________________
காயப்படுத்தி
நினைவூட்டியது அம்மாவை
சுவையான தூதுவளை!
______________________
பழங்கால மரம்
நரைத்துவிட்டதோ
உச்சியில் கொக்குகள்!
- தக்ஷன், தஞ்சை
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- தக்ஷன்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post