இன்று சித்ரவதை
நாளை அழகு
சிற்பியிடம் மாட்டிய கல்
______________________

கோபுரக் கலசத்தை
அசைத்துப் பார்க்கிறது
குளத்தில் விழுந்த கல்!
______________________

வறுமைக் கோடு
தெளிவாய் தெரிகிறது
விலாவில்!
______________________

சவக் கிடங்கில்
சிரிப்பு எதற்கு?
மின் விளக்கு!
______________________

சூடு ஏற்றுகிறார்கள்
நிச்சயம் அடி உண்டு
பறைக்கு!
______________________

பட்ட மரம்
பூத்திருக்கிறது
காளான்!
______________________

அடி வாங்கியபின்
அணைந்துகொள்கிறது
நெஞ்சோடு பறை!
______________________

அக்கரைக்குச் செல்ல
இலவச படகு
எறும்புக்கு சருகு!
______________________

காயப்படுத்தி
நினைவூட்டியது அம்மாவை
சுவையான தூதுவளை!
______________________

பழங்கால மரம்
நரைத்துவிட்டதோ
உச்சியில் கொக்குகள்!

- தக்ஷன், தஞ்சை

Pin It