honor killing 1பண்டிகை நாளில் படைத்திடும் முன்
இலையைத் தொட்டால்
தேள் கொட்டும்

பொய் சொன்னால்
சாமி கண்களைக் குத்தும்

ஒப்புக்கு சத்தியம் செய்தால்
அம்மா அப்பாவுக்கு ஆபத்து வரும்

சொல்லி சொல்லி வளர்த்த அம்மா
சொன்னதே இல்லை-
சாதி மாற்றிக் காதலித்தால்
அப்பாவும் அண்ணாவும் ஊருடன்கூடி
எம்மை வெட்டுவார்கள் என்று...

- இரா.பகுத்தறிவு

Pin It