கதகதப்புக்கென்று உன்
மேக தேகத்தை
கட்டியணைத்தபோது
பெய்த பெரும்
மழையும் விட்டிருந்தது
என் கனவுக்குடைக்குள்...!
--
இரவு நதிக்குள்
நாமிருவரும் மூழ்கித் திளைத்திடுவோம்.
நனைந்த வெட்க ஆடைகளை
மோகக் கரைகளில் விட்டெறிந்து
நிர்வாணத்தை அலங்காரமிடுவோம்.
வா.. அந்திப்படகை அனுப்புகிறேன்.
--
உன் தேகத்தின் பாதாளத்திற்குள்
இறங்கி மீண்டபோதுதான்
நான் தெளிந்தேன்
காமமும் காதலும் ஒன்றுதான் என.
- இரா.சந்தோஷ் குமார்
RSS feed for comments to this post