விளம்பர இடைவேளைகளில்
தேநீர் குடித்து,
கடைக்கு செல்லும்
வேலைகளை எங்களை வைத்தே முடித்து,
பக்கத்து டிவிக்காரர்களை
குறை பேசி,
அரட்டை அடித்து,
செய்தி இடைவேளையில்
இரவு உணவையும் முடித்து,
கம்பீரமாக அமர்ந்திருக்கும்
டிவி வீட்டுக்காரர்களுக்குப் பின்,
ஒண்டி நின்றே
எச்சில் விழுங்கியபடியே
முழுப் படத்தையும்
தவணை முறையில்
பார்த்து விட்டு
வீடு திரும்பிய பிறகு
யோசித்தது ஒன்றே ஒன்றுதான்....
"அடுத்த வாரம்
கொஞ்சம் சீக்கிரமாக சென்று
இடம் பிடித்து விட வேண்டும்....
உட்கார்ந்திருப்பவர்களுக்கு
வெங்காயம் உரிப்பது,
காய்கள் வெட்டுவதுதான் வேலை..
கடைக்குப் போவது,
தண்ணீர் இரைப்பது அல்ல...."
- கவிஜி
RSS feed for comments to this post