கீற்றில் தேட...

sand theft

இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?

ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.