
இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?
ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!

இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?
ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.