வீரசாகச கதைகள் படிக்கும் அப்பா
கதைக்குள் உலவி வெகு காலம் ஆகிவிட்டது
குதிரைப் படைகளையும் யானைப் படைகளையும்
சுற்றிக்கொண்டிருந்தவர் நடந்து போகிறார்
வந்தியத்தேவன்
ரோமாபுரி பாண்டியன் செழியன்
கருணாகரத் தொண்டைமான்
யவனராணி மஞ்சளகி
கடல்புறாவின் அலைகளொடு நட்பு வத்திருந்தவர்
புதினங்களில்
திரைப்படங்களில் நுழைந்து
சர்வ சாதரணமாக
வெளியே வருவார்
எம்ஜிஆர் பாடல்களை
பாடிக்கொண்டு இரவுகளைக் கழிப்பது
என் எஸ் கிருஷ்ணன்
எம் ஆர் ராதாவைப்பற்றி பேசுவது
தியாகராஜ பாகவதர் சின்னப்பா
சுந்தரம்பாள் ஜிக்கி என்றிருந்தவரை
தொலைக்காட்சி தொடர்கள் தூக்கிச்சென்றது
குரோதம் வஞ்சகம் பொறாமை நிரப்பப்பட்ட
நிழல் மனிதர்களின் கைகளில்
இரவுகள் பகல்களின் குவியல்கள்
எல்லாம் எளிய மனிதர்களிடமிருந்து
பிடுங்கப்பட்டவை
இதில் அப்பாவின் இரவு எது
அப்பாவின் பகல் எது
இரவு பகல்களை திருடுகிறவன்
திறமையாளன் என்ற
பட்டத்தோடு வெளியே திரிகின்றான்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்