குழந்தை கையில் பிடித்துப் பறக்கவிட்ட
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை
-
நான் கடந்து வந்துவிட்டதால்
எதுவும் இன்னமும் நிகழாமல்
இருக்கப்போவதில்லை
-
உனக்கு என்ன வேண்டும் என
என்னுள்ளிருந்துகொண்டே
கேட்கிறாய்
-
மன்னிக்கவியலாத
தவறுகள் செய்தபோதும்
கவனியாது விட்டுவிடுவது
உன்னிருப்பை என்னுடன்
உறுதி செய்துகொள்ளத்தான்
- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
பட்டாம்பூச்சிகள் தாமிழந்த
நிறங்களைப் பற்றி கவலை கொள்வதில்லை//
என் இப்போதைய சூழலுக்கு இவ்வரிகள் அத்தனை வலியோடு பொருந்திப் போகிறது . இழந்த நிறங்களை மீட்கும் வழி தெரியவில்லை பட்டாம்பூச்சிக் கு , ஆனாலும் குழந்தையின் மீது யாதொரு அதிருப்தியும் இன்றி மீண்டும் மீண்டும் பறக்கவே எத்தனிக்கிறது .
RSS feed for comments to this post