செடியிலிருந்து மலர்கள்
மட்டும் உதிர்வதில்லை
கூடவே
பனித்துளிகள்,
மழைக்காலமெனில்
நீர்த்துளிகள்,
மேலும்
மலர் நடுவே
ஒரு சொட்டுத்தேன்
கூடுதலாக
நான்கைந்து சிறு எறும்புகள்
அதிலும் கூடுதலாக
உதிர்தல் தாங்காத சில
இதயங்கள்

Pin It