1 வாழ்க்கையின்
தூண்டிலில்
நானொரு
புழு.
என்
தூண்டிலில்
அது
செத்த எலி.

2 என்
புண்ணியமனைத்தையும்
ஒரு
குவளை நீரில்
தாரைவார்த்துக்
கொடுத்திடத்தான்
காத்திருக்கிறேன்.
பாவம் செய்த கடவுள்
எவனாவது அகப்பட்டால்
தேவலாம்.

3 மிஸ்டர் டேஷ்
ஒரு புண்ணியாத்மன்.
ஃபுல் ஷட்-டவுன்
தினத்துக்கு
ரெண்டு நாள் முன்னாலேயே
காலமாகிக் கொண்டார்.

4 எவ்வளவோ
மாறிவிட்டிருக்கின்றன
சலூன் ஷாப்கள்.
அரசியல் பேசவும்
கேட்கவும்
ஆளேயில்லை.

5 இந்த
நதியின்
லட்சணத்துக்கு
முன்னால்
நான்
வாழ்வதெல்லாம்
ஒரு பிரச்சினையேயில்லை.

Pin It