நேற்றைப் போலவே
மொழியற்றதாகி விடுகிறது
நிலவிடம்
நான் பகிர்ந்து கொள்ள இருக்கும்
இன்றைய வருத்தங்கள்.

வைகறையில் மலரக் காத்திருக்கும்
மொட்டுக்களின் மேல்...
எனது வருத்தங்கள் பனித்துளிகளாய்..
துளிர்ப்பதில் விருப்பம் இல்லை.

சிரித்தலைப் பற்றிய எனது
நேற்றைய கனவுகள்....
இன்றும் வந்து அமர்ந்து கொள்கிறது
எனது இரவுகளின் மேல்.
 
தன் கீழ் அசுத்தம் செய்பவனைப் பற்றிய
துக்கங்களை வெளிச் சொல்ல இயலாத
மரங்களைப் போல் வளர்கிறேன் நான்.

Pin It