நேற்றைய பொழுதுகள்
கனத்துவிட்டன‌
சுமையேறிய மூளையில்
கடவுளைத் தொழுத கண‌ங்கள்
காயப்பட்டுக் கிடக்கின்றன‌

செல்லரித்த
என் வாழ்வின் மொத்த
பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும்
கடைசி பக்கத்தின்
இறுதி ஓரத்தில்
ஒன்றெழுத எண்ணுகிறேன்
"நான் இன்னும் சாகவில்லை"

Pin It