பாலை நிலத்தின்
வறண்ட தேகங்களில்
மீதப்பட்ட குருதியை
உறிஞ்சி முளைக்கிறது
கருவேல மரங்கள்.
தனக்கான ஆயுளை
நீட்டித்துக் கொள்ள
எத்தனிக்கும் ஒவ்வொரு
கணங்களிலும் உடுத்திக்
கொள்கிறது முள்கவசத்தை.
பிசின்களை தேகம்
முழுதும் துக்கநீர்களாக
ஓடவிட்டு ஒப்பாரியில்
உரைக்கிறது அதன்
மீதான பலவந்தத்
தாக்குதல்களை.
யாருமே சுவிக்காத
மஞ்சள் பூக்களை
உடுத்திக் கொண்டு
முதிர்கன்னியாய்
காத்து நிற்கிறது
அதன் கன்னித்தன்மையை.
- சோமா
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- சாதித்தார் ஸ்டாலின்! இது சொல்லாட்சியல்ல, செயலாட்சி!
- முனீஸ்வரன்
- அன்னை நாகம்மையார்: பெரியாரின் மனைமாட்சி
- ரிசல்ட் வரும் நாள்
- நதியைக் கொன்றவர்கள்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்