*
எதையும் தள்ளி வை என்கிறது மழை
சிரித்தபடி விரிகிறது குடை

அதிகாலை சாம்பல் நிறத்தை
விடாமல் ஈரப்படுத்தும் காற்றில்
புலம்பெயர்கிறது கோப்பையிலிருந்து நழுவும்
காபியின் வெண்புகை

ஊடகத் தகவல் வழியே நீந்தி மிதக்கிறது
பள்ளிக்கூடங்களுக்கான விடுப்புச் சூழல்
பின்
கலர் ரிப்பன்களும் வர்ணக் கால்சட்டைகளும்
நனைய நனைய
கிழிந்த நோட்டுகளிலிருந்து புறப்படுகிறது
தெருவெங்கும் கப்பல்கள்

*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It