*
வந்துப் போவதில் இருக்கும்
சிரமத்தை பொருட்படுத்தவில்லை
வார்த்தைகள்
காகிதங்களின் முனை மடங்குதலில்
அரூபமாகும் எல்லைகளை
மீறுவதாக குற்றம் சுமக்கின்றன
நவீனப் படிமங்கள்
ஒவ்வொரு புள்ளியோடு
முடிந்துவிட்டதாக வரும் அறிவிப்பு
ஒரு பைத்திய இரவின்
அர்த்த ஊளையிடுதலாகவோ
வால் விடைத்து இருளை நக்கும்
ருசியெனவோ
மாம்சத்தின் ரத்த கவுச்சியென்றோ
தீர்ந்துவிடுகிறது
உடன்படிக்கையோடு கை குலுக்குதல்
சிரமமென பொருட்படுத்துவதில்லை
வார்த்தைகள்
*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்