எழுத நினைத்த கவிதை,
மை நிரப்பும் முன்
மறந்து போகும்
சாபத்திலிருந்து
விமோசனம் பெற,
ஒரு வேளைகூட
தவறாது
உறிஞ்சிக் கொண்டேயிருக்கிறது
பேனா
ஞாபக மறதி லேகியங்களை
உமிழ்ந்து கொண்டேயிருக்கிறது
உச்சாடனங்களை
காலம் கனிந்து
பந்து முனைகளில்
பிறக்க எத்தனிக்கையில்
உறைந்து நிற்கிறது
ஆதியும்
அந்தமும்

Pin It