இலகுவாய் தன்னிலை மறந்து
ஓர் சிட்டுக்குருவி
தன் வண்ண சிறகுகள்
விரித்துப் பறந்து கொண்டிருந்தது,
மேசை மீதான புத்தகத்தின்
அட்டைப்படத்தில்..

தலை சாய்த்து விழிக்குமென்
பார்வை செவிகளுக்கு மட்டுமென
சிறகுகள் படபடக்கும்
மெல்லியதோர் சங்கீத நாதம்
நிறைகிறது...

மின்னல் பிம்பங்கள் என்னுள்
நெளியும் தருணம்
மெலிதான முறையில் ஒரு ஊடகம்
அரவமின்றி வகுக்கப்பட,
அறையில் ஆராவாரமற்று
என்னை வெறித்தபடி நிற்கிறது
ஒற்றை மரம்..

மேசை மீதான
புத்தகத்தின் அட்டைப்படத்தில்
வண்ணச் சிறகுகளுடன் நான்..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

Pin It