*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்

பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது

இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது

மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்

முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன

****
- இளங்கோ

Pin It