*
கருங் குருதியின் வழியே
நீளும் ஒற்றைப் பாதையோடு
பாதங்கள் பிய்ந்து விரல் நகம் உடைந்து
நிணம் ஒழுக
யாசகமாய் கையேந்தி கிடக்கிறது
நெடுங்காலமாய்
உன்
துரோகம்..

*****
     - இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It