*
படி வழியே இறங்கும்
அமைதியான நீரை ஒத்திருக்கிறது
உன் பாதங்கள்
அவைகளை
இரவின் மதில் சுவரிலிருந்து
ஒரு ஜோடி பச்சைக் கண்கள்
சாம்பல் நிறமெனக் குறிப்பெடுக்கின்றன
பஞ்சுப் படுக்கையின் மேல்
உன் பாதங்கள் ஒரு இறகைப் போல மிதக்கின்றன
என் கனவில்
நம் ரதத்தில் சரியும் சக்கரங்களை
இட்டுச் செல்லும்
கால் தடங்கள்
ஒற்றையடிப் பாதையினூடே
உன்னிடமே
வந்து சேர்கிறது
இடுப்புயர நாணலின் வெட்கத்தில்
இடம் மாறும் இதயம்
அடுக்கடுக்காய் அவிழச் செய்கிறது
துரோகத்தின் சாயலை
பிரியத்தின் பதற்றத்தை
மௌனத்தின் கசப்பை
பிறகு
வடிந்து போன மிச்சமென
தேங்குகிறது
கொசு மொய்க்கும்
ஒரு வார்த்தை
*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்