வெண்ணிறத் திரை
மெலிதாக ஊடுருவப்பட்டு
சாளர கட்டங்கள் வழி
இரவுக்கீற்றுகளிடும்
சலனமற்ற நர்த்தனம்..

நிதம் என் உறக்கங்கள்
என்னுடையதாக இருப்பதில்லை..
என்னைத் தழுவியும் இருக்கவில்லை..

பின்னிரவு மீதான
நிதர்சன சந்தேகங்கள்..
என்னை அயர்த்தி
என்னவளுக்கும் பின்னிரவுக்குமான
நடப்புகள் பற்றி..

தன்மான மயிர்
உந்தித் தள்ள
விழிகள் சிவந்தும்
தொடர்கிறது
என் யூகத்திற்கான கண்காணிப்பு..

இன்றும் நடந்தேறுகிறது
அவள் அதரங்களுடனான
அழகியதோர் பிணைப்பு..
நிம்மதி நாடிகள்
துளிர்த்திட..
அது பின்னிரவுடன் அல்ல!!

 - தேனப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It