செம்பருத்தி சூடி
தெருவில் நடந்தாய்
செடிகளிலிருந்து
உதிரத் தொடங்கின‌
ரோஜாக்களும் மல்லிகையும்

***

காதுகுடைந்து
நீ எறிந்த
கோழியின் இறகை
ஏக்கத்தோடு பார்த்தது
தோகை மயில்

***

மழை வருமென்ற‌
வானிலை தெரிந்தும்
குடையின்றி வருகிறேன்
தெரியுமெனக்கு
சின்ன குடையோடு
வருவாய் நீ.

****

உன் நினைவுகளுக்கு
இடம் தராத மழை
மழையா என்ன?

Pin It