எதையாவது எழுத நினைத்து
எதையாவது
கிறுக்கிவைக்கிறேன்..
கண்ணாடித்திரைக்கப்பால்
கண்சிமிட்டும்
கோஹினூரென
கைவரப்பெறாமலே,
சுற்றிச்சுழன்றடிக்கும்
கனவுமண்டலத்தின் பெருவெளியில்
சுதந்திரப்பறவையாய்...
நீந்திச்செல்கிறது ஒரு கவிதை..
சலனமற்றிருந்த மனக்குளத்தில்
அலையெழுப்பிய கல்லால்
வரிசையற்றலையும் எழுத்தெறும்புகள்
கலைந்தோடுவதை
வேடிக்கை பார்த்தபடி..

Pin It