*
ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும்
ஒன்றிரண்டு
நம்பிக்கைத் தளிர்களின் நிறம்
பழுக்கத் தொடங்குவதோடு

அவை..

உதிரும் சந்தர்ப்பங்களுக்கான
நுனி கருகுதலை
ஆதார நரம்புவரை பரப்பிய பின்..

கழன்று கொள்கிறது..

யாதொரு
பிரயத்தனமும் அவசியப்படாமல்..!

****
- இளங்கோ

Pin It