என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்.

பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து.. குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி
எனக்குள் நுழைந்துவிட

காத்துக் கிடக்கிறது
பல யுகங்களாய்

கிடக்கட்டும்..!

- இளங்கோ  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It