இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க ஊழியர்களுக்கு வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதாக நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தரகர்கள், அரசு அதிகாரிகள் மூலம் அரசு நிலத்தை வணிக நிலமாக, முறைகேடாக போலியாக மாற்றம் செய்து, சங்க உறுப்பினர்களுக்குப் பட்டா வாங்குவதற்காகத்தான் இவ்வளவு பெரும் தொகை வாரி இறைக்கப்பட்டுள்ளது.
இம்முறைகேடு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்றவுடன் பெல் சிட்டி என்ற பெயரில் பெல் நிறுவன ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிறுத்தி வைக்கப்படுவதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பணம் கொடுத்து எப்படியாவது காரியம் சாதிக்க நினைத்து ஏமாந்த தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நிர்க்கதியாய் நிற்கின்றனர்.
மேற்கண்ட மகத்தான சாதனையை யார் செய்திருப்பார்கள்? அனேகமாக ஆளும் கட்சிக்காரன் எவனாவது செய்திருப்பான் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லை. உண்மையில் இதில் ஈடுபட்டிருப்பது யார் என்று தெரிந்த பலருக்கு அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் தலையை சுற்ற ஆரம்பித்து விட்டது. எதற்கும் நீங்களும் தயாராக இருங்கள் தலை சுற்றி கீழே விழுந்து விடப் போகிறீர்கள்!
‘தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரே நக்சல்பாரி புரட்சிகர அமைப்பு நாங்கள் மட்டுமே’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் அமைப்பின் தொழிற்சங்க பிரிவினர்தான் இந்தச் சாதனைக்கு சொந்தக்காரர்கள். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலச் செயலாளர் திருவாளர் சுப.தங்கராசு அவர்கள்தான் ஓய்வு பெற்ற பெல் நிறுவன தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி இந்த ரியல் எஸ்டேட் ’தரகு’ வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார்.
இந்த ஊழல் நக்கீரன் பத்திரிகையில் வெளியாகி அம்பலமான பிறகு அந்த அமைப்பின் மாநில இணைச் செயலாளர் திருவாளர் பழனிச்சாமி அவர்கள் ‘சுப. தங்கராசுவுடன் சங்கத்தினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது’ என்று ரகசியமாக உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பொதுவில் விளக்கமளிக்கவோ, சுய விமர்சனம் செய்துக் கொள்ளவோ முன்வராமல் இதில் தமது பொறுப்பை கைக்கழுவி மூடி மறைத்து விடப் பார்க்கிறார்கள்.
‘திரு சுப தங்கராசு நல்லெண்ண அடிப்படையில் ஓய்வு பெற்ற பெல் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தார். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அவரை ஏமாற்றி விட்டார்கள், அதற்கு அவர் என்ன செய்வார், அவருக்குப் பொறுப்பான அரசியல் தலைமைதான் என்ன செய்யும்’ என்று அப்பாவித்தனமாக சிலர் நினைக்கலாம்.
ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறையின் அடிப்படையில் பரிசீலிக்கும் போதுதான் இந்தச் சீரழிவின் முழு பரிமாணமும் தெளிவாகும். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத் தலைமைக் குழுவில் இருக்கும் ஒருவரது சொந்த வாழ்க்கையும், அவரது நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அரசியல் தலைமையாலும், தொழிற்சங்கத் தலைமையாலும் மாதாந்திர அடிப்படையில் வழிகாட்டப் படுகின்றன, வழிகாட்டப்பட வேண்டும்.
அவ்வாறு வழிகாட்டப்படும் நூற்றுக்கணக்கான தோழர்கள் பேருந்துகளிலும் பொது இடங்களிலும் நிதி திரட்டியும், பத்திரிகை விற்றும் தமது வாழ்வுக்கான ஆதாரமாக ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மக்களிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய தோழர்களை அவமதித்து வெளியேற்றி பின்னர் நடுத் தெருவில் நிறுத்தி விடும் இந்த அமைப்பில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கையாண்டிருப்பதும், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஆகக் கேடுகெட்ட ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பலுடன் உறவாடியதும் புரட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும், பு.ஜ.தொ.முவின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் இழைத்த துரோகமாகும்.
100 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் திரட்டியதும், அதை வெள்ளையாக ரூ 9 கோடி, கருப்பாக பல 10 கோடிகள் என்று ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கொடுத்ததும், அரசு நிலத்தை முறைகேடாக பாகுபாடு மாற்றம் செய்ய முயற்சித்ததும் திரு தங்கராசு என்ற தனிநபர் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை.
முறைகேடு பற்றிய விபரங்கள் நக்கீரன் பத்திரிகையில் வெளியாவதற்கு முன்பு பு.ஜ.தொ.மு தலைமைக் குழுவுக்கும் அதன் அரசியல் தலைமைக்கும் இந்த விவகாரங்கள் தெரியாமல் இருந்திருக்க முடியாது. பொதுவில் அம்பலமாவது வரை அதை மூடி மறைத்தவர்கள், விஷயம் வெளியானவுடன் திரு சுப. தங்கராசுவை இடைநீக்கம் செய்து தங்களை சுத்தமானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
எனவே, இது ஏதோ தனிப்பட்ட ஒரு நபரின் தவறு என்று நினைத்து விட முடியாது. இந்த ஊழல் புரையோடிப் போனது என்ற முறையில்தான் இதை நாம் அணுக வேண்டும்.
உதாரணமாக, போலீஸ் சாத்தான்குளம் செல்ஃபோன் வியாபாரிகளை கொலை செய்த விவகாரம் ஊடகங்களில் அம்பலமானதும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் மூலம், ‘போலீசு ஏதோ இப்போதுதான் முதன் முறையாக இப்படிப்பட்ட கொலையைச் செய்து விட்டதைப் போன்றும், இத்தகைய கொலைகளை நீதிமன்றம் சகித்துக் கொள்ளாது’ என்றும் நமது காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
ஆனால் போலீசின் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் இதே நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதை பற்றி நீதிபதிகளுக்கு தெரியாதா என்ன? சென்னை உயர்நீதி மன்றத்திலேயே நுழைந்து நீதிபதிகளின் மண்டைகளையே பிளந்த தமிழக போலீசின் கோரமுகத்தை அறியாதவர்களா நமது நீதிபதிகள்? போலீசிடமிருந்து தம்மையேக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்கள்தான் நம்மை காப்பாற்றப் போகிறார்களாம்! இவ்வாறாக போலீசின் குண்டாந்தடிகளும், துப்பாக்கிகளும் மட்டுமல்ல இத்தகைய நீதிமன்ற நடைமுறைகளும்தான் சமூகத்தின் பாதுகாப்பு கவசங்கள் என்று சாதிக்கிறார்கள், ஆளும் வர்க்கங்கள்.
அது போல, பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத் தலைமைக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் தெரியாமலேயே சுப.தங்கராசு மட்டுமே இந்த ஊழலைச் செய்து விட்டதாக, தமது வெகுளித்தனமான ஆதரவாளர்களையும், அமைப்பிலுள்ள தமது கொத்தடிமைகளையும் நம்ப வைப்பதற்காக, அவரை அமைப்பிலிருந்து நீக்கி விட்டதாக அறிக்கை வெளியிட்டு நமது காதுகளில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சாத்தான் குளம் போலீசாரை இடைநீக்கம் செய்துள்ள அரசின் செயலுக்கும், இவர்களின் செயலுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், தான் உருவாக்கிய திட்டத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, புதிதாக எதையும் உருவாக்காமல், கடந்த இருபது ஆண்டுகளாக, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர் இவ்வமைப்பினர்.
காலிப் பெருங்காய டப்பாவிலிருந்து வாசனை வருவதைப் போன்று, எழுபதுகளில் நக்சல்பாரி அமைப்பிலிருந்து தெரிந்து கொண்ட சில வார்த்தைகளை நீட்டி முழங்குவதாலேயே, புட்சிகர அமைப்பாக வெகு காலத்திற்கு நடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதைத்தான் நூறு கோடி ரூபாய் பெல் சிட்டி ஊழல் மூலம் நிரூபித்துள்ளனர்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமது அமைப்பில் புரட்சிகர உணர்வோடு இணைந்துச் செயல்பட முன்வரும் இளைஞர்களை போகாத ஊருக்கு வழி கேட்பவனைப் போல, நிறைவேற்றவே முடியாத மாதாந்திர வேலைத் திட்டத்தை தந்தும், உளவியல் ரீதியாக அச்சுறுத்தியும் காயடித்தார்கள். பலரை மன நோயாளிகளாக ஆக்கினார்கள்.
புரட்சிகரக் கோட்பாடு இல்லாமல், எனவே, புரட்சிகர நடைமுறையும் இல்லாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு கிடக்கும் இந்த அமைப்பினரும் அதன் சகோதர அமைப்புகளும் சீரழிவுப் பாதையில் வெகு தூரம் சென்று விட்டதற்கான துலக்கமான ஆதாரம்தான் இந்த நூறு கோடி ரூபாய் ஊழல். இன்னும் பல பரபரப்பான காட்சிகளை அவர்களிடமிருந்து நாம் இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கலாம்.
இனியும் இந்த சீரழிவு அமைப்புகளை புரட்சிகர சக்திகளாக பிரச்சாரம் செய்து கொண்டு அங்கே ஒட்டிக் கொண்டிருப்பவர்கள், இந்த முறைகேடுகளிலும் சீரழிவுகளிலும் பங்காளிகளாகவும், பங்குதாரர்களாகவும் மட்டுமே இருக்க முடியும். இந்த விபரங்கள் தெரியாமல் இவர்கள் முற்போக்கான புரட்சிகரத் தன்மை உடையவர்கள் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் இந்த முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்.
பொதுவுடைமை இயக்க சித்தாந்த வார்த்தைகளை உச்சரிக்கும் தகுதியைக் கூட பு.ஜ.தொ.முவும் அதன் சகோதர அமைப்புகளும் இழந்து விட்டன என்பதன் அடையாளம்தான் இந்த ஊழல். தமிழகத்தின் புரட்சிகர இயக்கத்துக்கு பெரும் முட்டுக் கட்டையாக மாறி விட்டிருக்கும் இந்த அமைப்புகளின் தலைமையைத் தூக்கி எறிவது பற்றி உள்ளே இருக்கும் புரட்சிகர சக்திகளும், அதனை புரட்சிகர அமைப்பாக அங்கீகரிக்கும் ஆதரவாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.
- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு
உங்கள் நிலைமை அப்படியே இருக்கிறது !
"கொலை செய்த சாத்தான்குளம் போலீசை வைத்து எல்லா போலீசையும் அவதூறு செய்யக் கூடாது" என்ற சங்கிகளின் வாதத்தைப் போல இருக்கிறதே, நீங்கள் சொல்வது.
இது தனிநபரின் பிரச்சனை இல்லை. அமைப்பு முறை, அமைப்புத் தலைமை இவற்றில் புரையோடிப் போயுள்ள ஊழல், அதை கேள்வி கேட்க விடாமல் அணிகள் முடக்கப்படும் நிலைமை, இவை தொடர்பானது.
இதை நேர்மையாக பரிசீலிக்காமல், பிரச்சனையை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு செய்வதாலோ, அவர்களை சிறுமைப்படுத்து வதாலோ யாருக்கு லாபம்? அதே ஊழல்வாதிகளுக்கு த்தான், உங்கள் மொழியில் சொன்னால் "கட்சித் தலைமை விமர்சன சுயவிமர்சனத்துக ்கு அப்பாற்பட்டவர்க ளாக வைத்திருக்கும் சிலருக்குத்தான் " லாபம்.
இப்படி ஒரு சிலரையும் தம்மையும் விமர்சன சுய விமர்சனத்துக்கு அப்பால் கட்சித் தலைமை வைத்திருப்பதைப் பற்றி பேசுங்கள்.
இந்த இடத்தில் தோழர்களாக இருப்பவர்கள்...
//தமது வெகுளித்தனமான ஆதரவாளர்களையும் , அமைப்பிலுள்ள தமது கொத்தடிமைகளையும ் நம்ப வைப்பதற்காக//
இந்த இடத்தில் கொத்தடிமையாக ஆகிவிட்டார்கள்...
//புரட்சிகர உணர்வோடு இணைந்துச் செயல்பட முன்வரும் இளைஞர்களை//
கொத்தடிமைகள் தற்போது புரட்சி உணர்வான இளைஞராகிவிட்டனர்...
//இந்த விபரங்கள் தெரியாமல் இவர்கள் முற்போக்கான புரட்சிகரத் தன்மை உடையவர்கள் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்க ள் இந்த முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவ ே இருப்பார்கள்//
புரட்சி உணர்வு மிக்க இளைஞர்கள் தற்போது முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்...
//உள்ளே இருக்கும் புரட்சிகர சக்திகளும் அதனை புரட்சிகர அமைப்பாக அங்கீகரிக்கும் ஆதரவாளர்களும்தா ன் முடிவு செய்ய வேண்டும்//
கொத்தடிமைகள், முட்டுக்கொடுப்ப வர்கள் இறுதியில் புரட்சிகர சக்தியாக மாறிவிட்டனர்...
இந்த பக்கம் ஒரு குத்து! அந்த பக்கம் ஒரு குத்து! வடிவேல் காமெடி அளவுக்குதான் இந்த கட்டுரை வொர்த்து. ஆனால் இதில் ஒரு கண்ணோட்டம் வெளிப்படுகிறது, அதை கண்டிக்க வேண்டும். அதாவது அணிகளை முட்டாளாக கருதும் சீரழிந்த அதிகாரத்துவ திமிர்தனமும், மக்களை விட தங்களை பெரிய 'அறிவாளியாக' நினைத்துக்கொள்ள ும் தனிநபர்வாத சிறுபிள்ளை தனமும்.
2. //அத்தகைய தோழர்களை அவமதித்து வெளியேற்றி பின்னர் நடுத் தெருவில் நிறுத்தி விடும்//
ஓ! இது தான் உங்க பிரச்சனையா? உலக வரலாற்றில் மக்கள் நலனுக்காக பலர் தமது இன்னுயிரை தியாகம் செய்தனர், செய்து வருகின்றனர். அவர்கள் யாரும் எதையும் "எதிர்பார்ப்பதி ல்லை". நீங்கள் வீசேசமானவர் போல! நல்லது! இதை ஒரு குறுங்குழுவாதிய ின், அற்பவாதியின் புலம்பல்! அதற்குமேல் ஒரு வெங்காயமும் இல்லை.
3. //சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர ாக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள் . அதற்குத் தலைமையின் எதிர்வினை "அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”, என்று தகவல் தெரிவித்தவர்களி டமே கேள்வி கேட்டதுதான்//
அப்பொழுது நீங்க இந்த அமைப்புகளில் இருந்தீங்களே, நீங்கள் என்ன செய்துக்கொண்டிர ுந்தீர்கள் என்பதை விளக்கினால் நல்லாயிருக்கும் . உங்களுக்கு பித்தம் அதிகரித்துவிட்ட து என நினைக்கிறேன்.
4. //குற்றம் சாட்டியவர்களையே அதை நிரூபிக்கச் சொல்வது என்பது குறைந்தபட்ச ஜனநாயக நேர்மை கூட இல்லாத செயல், புரட்சிகர நடைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.//
ஸப்பா முடியல! ஆதாரம் இருந்தால் மட்டும் தான் நாம் ஒருவர் மீது குற்றமே சாட்ட முடியும்! குற்றம் சாட்டிய பிறகு ஆதாரத்தை தேட வேண்டும் என்பது வடிவேல் சொல்வது போல் புதுசாயில்ல இருக்கு!
5. பிறகு இந்த கட்டுரையில் ஒரு முறைக்கு பல முறை படித்து தேவையற்ற விசியங்களை நீக்க முயற்சித்து பாருங்கள், அப்பொழுது தான் தெரியும் எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று. மார்க்சியத்தின் அடிப்படையையாவது புரிந்துக்கொண்ட ு பேசுங்கள்!
6. // ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறையின் அடிப்படையில் பரிசீலிக்கும் போதுதான் இந்தச் சீரழிவின் முழு பரிமாணமும் தெளிவாகும். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத் தலைமைக் குழுவில் இருக்கும் ஒருவரது சொந்த வாழ்க்கையும் அவரது நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அரசியல் தலைமையாலும், தொழிற்சங்கத் தலைமையாலும் மாதாந்திர அடிப்படையில் வழிகாட்டப் படுகின்றன, வழிகாட்டப்பட வேண்டும்.//
//திரு தங்கராசு என்ற தனிநபர் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை.//
நண்பர்களே நல்லா பாத்துக்கோங்க இப்படி பேசுவது தான் மார்க்சியமா? ஐயா நீங்கள் புரிந்துக்கொண்ட து மார்க்சியம் அல்ல 'ம்யசிக்ர்மா'! ஐயா நீங்கள் குமுதம் இதழுக்கு 'கிசு கிசு' எழுத போகலாம், பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு: தப்பு செய்தவர்கள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, நான் இங்கு பரிசீலித்தது ஆம்பள்ளி & கோ. வின் கண்ணோட்டத்தை மட்டுமே!
இப்படிக்கு:
கொத்தடிமை, பண்ணையடிமை, கூலி அடிமைகளில் ஒருவன், நிச்சயமாக நான் எஜமானனோ, பண்ணையாரோ, முதலாளியோ அல்ல!
இந்த இடத்தில் தோழர்களாக இருப்பவர்கள்...
//தமது வெகுளித்தனமான ஆதரவாளர்களையும் , அமைப்பிலுள்ள தமது கொத்தடிமைகளையும ் நம்ப வைப்பதற்காக//
இந்த இடத்தில் கொத்தடிமையாக ஆகிவிட்டார்கள்...
//புரட்சிகர உணர்வோடு இணைந்துச் செயல்பட முன்வரும் இளைஞர்களை//
கொத்தடிமைகள் தற்போது புரட்சி உணர்வான இளைஞராகிவிட்டனர்...
//இந்த விபரங்கள் தெரியாமல் இவர்கள் முற்போக்கான புரட்சிகரத் தன்மை உடையவர்கள் என்று அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்க ள் இந்த முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவ ே இருப்பார்கள்//
புரட்சி உணர்வு மிக்க இளைஞர்கள் தற்போது முறைகேடுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்...
//உள்ளே இருக்கும் புரட்சிகர சக்திகளும் அதனை புரட்சிகர அமைப்பாக அங்கீகரிக்கும் ஆதரவாளர்களும்தா ன் முடிவு செய்ய வேண்டும்//
கொத்தடிமைகள், முட்டுக்கொடுப்ப வர்கள் இறுதியில் புரட்சிகர சக்தியாக மாறிவிட்டனர்...
இந்த பக்கம் ஒரு குத்து! அந்த பக்கம் ஒரு குத்து! வடிவேல் காமெடி அளவுக்குதான் இந்த கட்டுரை வொர்த்து. ஆனால் இதில் ஒரு கண்ணோட்டம் வெளிப்படுகிறது, அதை கண்டிக்க வேண்டும். அதாவது அணிகளை முட்டாளாக கருதும் சீரழிந்த அதிகாரத்துவ திமிர்தனமும், மக்களை விட தங்களை பெரிய 'அறிவாளியாக' நினைத்துக்கொள்ள ும் தனிநபர்வாத சிறுபிள்ளை தனமும்.
2. //அத்தகைய தோழர்களை அவமதித்து வெளியேற்றி பின்னர் நடுத் தெருவில் நிறுத்தி விடும்//
ஓ! இது தான் உங்க பிரச்சனையா? உலக வரலாற்றில் மக்கள் நலனுக்காக பலர் தமது இன்னுயிரை தியாகம் செய்தனர், செய்து வருகின்றனர். அவர்கள் யாரும் எதையும் "எதிர்பார்ப்பதி ல்லை". நீங்கள் வீசேசமானவர் போல! நல்லது! இதை ஒரு குறுங்குழுவாதிய ின், அற்பவாதியின் புலம்பல்! அதற்குமேல் ஒரு வெங்காயமும் இல்லை.
3. //சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர ாக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள் . அதற்குத் தலைமையின் எதிர்வினை "அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்”, என்று தகவல் தெரிவித்தவர்களி டமே கேள்வி கேட்டதுதான்//
அப்பொழுது நீங்க இந்த அமைப்புகளில் இருந்தீங்களே, நீங்கள் என்ன செய்துக்கொண்டிர ுந்தீர்கள் என்பதை விளக்கினால் நல்லாயிருக்கும் . உங்களுக்கு பித்தம் அதிகரித்துவிட்ட து என நினைக்கிறேன்.
4. //குற்றம் சாட்டியவர்களையே அதை நிரூபிக்கச் சொல்வது என்பது குறைந்தபட்ச ஜனநாயக நேர்மை கூட இல்லாத செயல், புரட்சிகர நடைமுறையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.//
ஸப்பா முடியல! ஆதாரம் இருந்தால் மட்டும் தான் நாம் ஒருவர் மீது குற்றமே சாட்ட முடியும்! குற்றம் சாட்டிய பிறகு ஆதாரத்தை தேட வேண்டும் என்பது வடிவேல் சொல்வது போல் புதுசாயில்ல இருக்கு!
5. பிறகு இந்த கட்டுரையில் ஒரு முறைக்கு பல முறை படித்து தேவையற்ற விசியங்களை நீக்க முயற்சித்து பாருங்கள், அப்பொழுது தான் தெரியும் எல்லாமே தேவையற்ற ஆணிகள் என்று. மார்க்சியத்தின் அடிப்படையையாவது புரிந்துக்கொண்ட ு பேசுங்கள்!
6. // ஒரு புரட்சிகர அமைப்பின் நடைமுறையின் அடிப்படையில் பரிசீலிக்கும் போதுதான் இந்தச் சீரழிவின் முழு பரிமாணமும் தெளிவாகும். ஒரு புரட்சிகர தொழிற்சங்கத் தலைமைக் குழுவில் இருக்கும் ஒருவரது சொந்த வாழ்க்கையும் அவரது நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அரசியல் தலைமையாலும், தொழிற்சங்கத் தலைமையாலும் மாதாந்திர அடிப்படையில் வழிகாட்டப் படுகின்றன, வழிகாட்டப்பட வேண்டும்.//
//திரு தங்கராசு என்ற தனிநபர் மட்டும் தொடர்புடைய விஷயம் இல்லை.//
நண்பர்களே நல்லா பாத்துக்கோங்க இப்படி பேசுவது தான் மார்க்சியமா? ஐயா நீங்கள் புரிந்துக்கொண்ட து மார்க்சியம் அல்ல 'ம்யசிக்ர்மா'! ஐயா நீங்கள் குமுதம் இதழுக்கு 'கிசு கிசு' எழுத போகலாம், பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு: தப்பு செய்தவர்கள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே, நான் இங்கு பரிசீலித்தது ஆம்பள்ளி & கோ. வின் கண்ணோட்டத்தை மட்டுமே!
இப்படிக்கு:
கொத்தடிமை, பண்ணையடிமை, கூலி அடிமைகளில் ஒருவன், நிச்சயமாக நான் எஜமானனோ, பண்ணையாரோ, முதலாளியோ அல்ல!
06.08.2020
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர ்
தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும்!
அன்பார்ந்த நண்பர்களே!
வணக்கம். கீற்று இணைய தளத்தில் 4-8-2020 அன்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் “ சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள ்ளது. அதில் மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர ் தோழர் ராஜு மீது திட்டமிட்டு அவதூறு கூறப்பட்டுள்ளது.
“சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர ாக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள் . அதற்குத் தலைமையின் எதிர்வினை "அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்று தகவல் தெரிவித்தவர்களி டமே கேள்வி கேட்டதுதான்.“
இது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திரு.ஜெயகாந்த்ச ிங் என்பவர் அவர் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட போது ‘சூறாவளி’ எனும் பெயரில் அவர் நடத்திய வலைத் தளத்தில் எழுதிய அவதூறு தான். பல வருடங்களாக சீந்துவாரற்று கிடந்த அவதூறை தூசி தட்டி எடுத்து வேறு இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார ்கள். தான் எழுப்பிய மாபெரும் குற்றச்சாட்டிற் கு ஒரு ஆதாரத்தை கூட இத்தனை ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை என அவருடன் சேர்ந்து எழுதும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினர் கேள்வி கேட்காமல் அவதூறை அப்படியே வாந்தி எடுத்துள்ளனர்.
எவ்வித முகாந்திரமும் இல்லாமல் போகின்ற போக்கில் அவர் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்று இவர்கள் சொல்வதற்கும் பா.ஜ.க. பாசிஸ்டுகளின் பிரச்சார முறைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் போலீசு எப் அய் ஆர் போட்டுவிட்ட ால் குற்றசாட்டப்பட் டவர் தான் இனி, தான் தவறு செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம். இந்த காவி பாசிஸ்டுகளின் ‘நீதி பரிபாலன’ முறையை தான் இவர்களும் முன்வைக்கிறார்க ள். நாங்கள் குற்றஞ்சாட்டிவி ட்டோம், முகாந்திரம், ஆதாரம் என்று யாராவது அவர்களிடம் கேட்டால், குற்றம் செய்யவில்லை என நீங்கள் நிரூபியுங்கள் எனத் திருப்பி கேட்கிறார்கள்.
தோழர் ராஜு தன் வாழ்வாதாரத்திற் கு என்ன செய்து கொண்டிருக்கிறார ் என்பதை யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையானதுத ான். திரு.ஜெய்காந்த் சிங்கும் தோழர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களில் அக்காலத்தில் இணைந்து ஈடுபட்டது விருதாச்சலம் வட்டாரம் அறிந்ததே. அதுமட்டுமன்றி தோழர்.ராஜுவின் குடும்பத்தில் ஒரு நபராகவும் அவர் பழகி வந்துள்ளார். அப்பேற்பட்ட ’தோழரால்’ ஆதாரத்தை காட்ட முடியவில்லையேன் றால் என்னவென்பது. கு ற்றச்சாட்டு வைத்த ஜெயகாந்த் சிங்கிற்கு இது பொய் என்பது நன்கு தெரியும்.
தினமலர் போன்று அவதூறுகளை அவிழ்த்துவிட்டா ல், மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகளின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தான் அது பயன்படுமே ஒழிய, சொல்பவர்களின் நோக்கத்திற்குகூ ட அவை பயனளிக்காது. இதை சொல்வதற்கு காரணம் பொதுவாழ்க்கையில ் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லா த ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.
கீற்று இணையத் தளம் என்பது முற்போக்கானவர்க ள், பகுத்தறிவாளர்கள ் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அறியப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மீதும், அமைப்பிலுள்ள தோழர்கள் மீதும் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, தனிநபர்களாக நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும் கீற்று ஓர் நேர்மையான தளம் என்றால் மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள ுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்த கட்டுரையை பதிப்பித்து இருக்க வேண்டும்.
மேலும் பல்வேறு இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் சங்கமமாக இருக்கிற கீற்று இணையதளம் தோழர் ராஜு பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. எனவே இது போன்ற அவதூறுகளை பரப்புவதை கீற்று இணையத் தளம் இனியாவது நிறுத்திக் கொள்ளவும். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர ் தோழர் ராஜூ மீது அவதூறாக வெளிவந்த பகுதிகளை மேற்கூறிய கட்டுரையில் இருந்து உடனே நீக்க வேண்டும். தங்களது தவறை பரிசீலிக்க வேண்டும்.
தோழர் ராஜு பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்களி டம் அதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் கேளுங்கள். அதை எடுத்து கொண்டு விருத்தாசலம் வாருங்கள். தோழர் ராஜு அவர்களின் சொத்து விபரங்களை பற்றியும், வாழ்வாதாரத்திற் கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார ் என்பது பற்றியும், எல்லா வகையிலும் பதில் அளிக்க அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைமைக் குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
உள்ளிட்ட சில தோழர்கள் கட்சியில் இருந்து
விலகியதற்கு, இந்த ரியல் எஸ்டேட் ஊழலில்
தங்களுக்குரிய பங்கைக் கேட்டு அது
கிடைக்காமல் போனதே காரணம் என்று
பரவலாகப் பேசப் படுகிறது. இதற்கு என்ன
விளக்கம் அளிக்கப் போகிறது மாநில
அமைப்புக் கமிட்டியின் தலைமை?
ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு எழுதிய கட்டுரையில் தோழர் இராஜூ தொடர்பான செய்திக்கு மக்கள் அதிகாரம் தெரிவித்த மறுப்புக்கு ஆம்பள்ளி தோழர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர்களது விளக்கம் வரத் தாமதமாவதாலும், இது குறித்து என்னிடம் பேசிய (முன்னாள் ம.க.இ.க.) தோழர்கள் பலர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும் அந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக இக்குற்றச்சாட்ட ு கூறப்பட்டு வரும் நிலையில்,
கட்சித் தலைமையின் சர்வாதிகாரப் போக்கில் அதிருப்தியுற்று தோழர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி வருவதும், தலைமையின் மீதான விமர்சனங்கள் பொதுவெளியில் அதிகரித்து வருவதுமான நிலையில்,
தேர்தல் கட்சிகளுக்கு நிகரான ஊழல் குற்றச்சாட்டில் தற்போது கட்சி அணி ஒன்றின் பொதுச் செயலாளரே சிக்கியிருக்கும ் நிலையில்,
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜனநாயகத் தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் கடைபிடிப்பது மட்டுமே அமைப்பின் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கும்.
அமைப்பிற்குள் இருக்கும் ஒருவர் எவ்வளவு சொத்து சேர்க்கலாம் என்பதையும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினரின ் சொத்து மதிப்பு என்ன, source of income என்ன என்பதையும் கட்சி இணையதளத்தில் வெளியிட்டு விட்டால் இத்தகைய விமர்சனங்களை எளிதாகத் தவிர்க்க முடியும்.
பொதுவெளியில் வைக்கப்பட்ட விமர்சனங்களை பொதுவெளியில் சந்திப்பதே சரியான அணுகுமுறையாகும் . அதை விடுத்து 'என் ஏரியாவுக்கு வா' என்று பதில் சொல்வது ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அழகல்ல. குற்றம்சாட்டியவ ர்கள் கட்சியின் முன்னாள் தோழர்கள் எனும்போது, இத்தகைய பதில்கள் கட்சி மீதான நம்பகத்தன்மையைக ் குலைக்கும்.
தோழர்கள் இது குறித்து பரிசீலிக்கவும்.
என்றும் அன்புடன்,
கீற்று நந்தன்
அனுப்புனர்
சுப தங்கராசு
இடைநீக்கம் -பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு & புதுச்சேரி.
பெறுநர்
பொறுப்பாசிரியர்
கீற்று இணையதளம்
வணக்கம்.
பொருள்:- தங்களது மூன்று கட்டுரைகளில் என்னைப் பற்றியும், பு.ஜ.தொ.மு. வை பற்றியும் அவதூறான செய்திகளைஆம் பள்ளி ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாடு & செங்கனல் குழு வெளியிட்டத ற்கு - மறுப்பு செய்தி- சம்பந்தமாக .
அன்புடையீர்.
(01) அரசியல் ரீதியான உங்களது விமர்சனத்தை நான் எதுவும் இங்கு சொல்லவில்லை .என் மீது ( நான் பெல் சிட்டி யில் ரூபாய் நூறு கோடி ஊழல் செய்த தாக)எந்தவித ஆதாரமில்லாமல் உங்கள் இணைய தளத்தில் எழுதி இருப்பதை நான் மறுக்கிறேன். கண்டிக்கிறேன். அந்த அவதூறு செய்தியை தங்களின் இணைய தளத்தில் கட்டுரையிலிருந் து நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(02) ஒருவேளை நீங்கள் ஆதாரம் இருக்கிறது என்று கருதினால் அதை எனக்கு தெரிவியுங்கள் .
(03) ஏனென்றால் நான் சம்பத்தப்பட்ட bhel pining centre T.Nagar Employee's welfareSociety (reged no.154/2012) யி ல் செயலராக 2012 முதல் 2019 November வரை பொறுப்பில் இருந்த பொழுது எல்லாக் வரவு- செலவு கணக்கு களையும்,மினிட்ஸ ் பதிவேடுகளையும் தென் சென்னை மாவட்ட சொசைட்டி பதிவாளர் முன்பு சமர்பித்து விட்டேன் . அதாவது 2012-13, 2013-14, 2014--15 ,2015-16, 2016-17, 2017-18, 2018-19, ஆகிய ஆண்டு களுக்கான கணக்குகளை சொசைட்டி பதிவாளர் அங்கீகரித்து g.o. வெளியிட்டு இருக்கிறார்கள் .அதைப்பற்றிஅந்த அலுவலகத்தில் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். எனவேதான் இந்த கருத்தை அவதூறு கருத்ததை தங்களது கட்டுரையில் இருந்து நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(04) ஒருவேளை நக்கீரன் பத்திரிக்கையில் வந்திருப்பது தான் ஆதாரம் என்று நீங்கள் கருதினால் அதில் என்னைப் பற்றி ஊழல் செய்ததாக எதுவும் இல்லை . தேவதாஸ் என்பவர் என்னை பற்றி சில அவதூறு சொல்லி இருந்தார் .அதற்கு நான் மறுப்பு சொன்னேன். மறுப்புக் கடிதம் கொடுத்து இருந்தேன். அடுத்த இதழிலேயே என்னுடைய மறுப்பு கடிதத்தை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.
(05) நான் பொறுப்பில் இருக்கும் வரை அதாவது ஏப்ரல் 2019 வரை சொசைட்டியில் வரவு செலவு தொகை ரூபாய் 50 கோடி மட்டுமே. பின் எப்படி நூறு கோடி ரூபாய்க்கு நான் ஊழல் செய்து இருப்பதாக எழுதி இருக்கிறார்கள். மேலும் அந்த தேதி வரை 24 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு விட்டது. இது மொத்தம் 320 பேருக்கு பதிவு செய்து கொடுக்க போதுமானதாகும். அதாவது தேவையான அளவு நிலம் வாங்கப்பட்டு விட்டது .அதன்பிறகு நடைபெற்ற விவரங்கள் எனக்கு தெரியாது.
(06) நவம்பர் 2019 ப்பிறகு அதாவது என்னை சட்டவிரோதமாக நீக்கிவிட்டு குறுக்கு வழியில் பழைய தலைவர் சில அதிமுக ரவுடிகள் உடன் சேர்ந்து சொசைட்டி கைப்பற்றிய பிறகு நடைபெற்ற ஊழல்களை பற்றி நான் சிசிபி இலும் சொசைட்டி பதிவாளர் இடமும் புகார் செய்திருக்கிறேன ். மேலும் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்திருக்கிறேன ் .அதனடிப்படையில் சொசைட்டியின் இரண்டு வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
(07) எனவே தாங்கள் என்னுடைய நன்மதிப்பு க்கு கேடு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் .வெளியிட்டதை நீக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிற ேன் .
(08) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள ை எழுதுவது அரசியல் ரீதியாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக் காது என கருதுகிறேன். ஆனால் அரசியல் விமர்சனம் செய்வதை நான் எதுவும் சொல்ல இயலாது .ஆதாரமற்ற அவதூறுகளை யாரும் நீங்களும் ஏற்றுக் கொள்ள முடியாது .எனவே தங்களிடம் கேட்டுக் கொள்வது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை நடத்துவதற்கு வாய்ப்புள்ள இந்த இணைய தளத்தை அவதூறான செய்திகளை பரப்புவதற்கு பயன்படுத்த நீங்கள் அனுமதிக்கக்கூடா து என்று கேட்டுக் கொள்வதுடன் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிற ேன்.
(09) மேலும் சட்டரீதியாக அவதூறு வழக்கு போடுகின்ற நிலைமைக்கு என்னை தள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். என்னிடம் நீங்கள் இது சம்பந்தமாக எப்பொழுது வேண்டுமானாலும் விவரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
நன்றி .வணக்கம்
இவன்
சுப தங்கராசு
11-08-2020
RSS feed for comments to this post