'இனப் பிரச்சினை - இலங்கை முஸ்லிம்களை புறக்கணிக்கிறதா இந்திய அரசு?' கட்டுரைக்கான எதிர்வினை

இரு தரப்பினருக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை  நடைபெறுவதற்கு முன்னால்  அவர்களுக்கிடையே சண்டை நடந்திருக்க வேண்டும். பிரச்சனை பட்டவர்கள்  தான் பேசித்தீர்க்க வேண்டுமே தவிர, சண்டையில் ஒருதரப்பினருக்கு மட்டும் சுயநல நோக்கங்களுக்காக உதவியவர்களெல்லாம் பேச்சுவார்த்தையில் பங்கு கேட்பது திருமணத்துக்கு வந்த விருந்தாளி தேனிலவில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்பது போன்றதாகும்.

உரிமை கேட்டு, சொந்த மண்ணின் விடுதலையை வேண்டி சிங்களவர்களுடன் போரில் ஈடுபட்டவர்கள் ஈழத்தமிழர்கள்.  பிள்ளைகள் ஆணும், பெண்ணும் மண்ணைக் காக்க செத்து மடியும்போது,   இலங்கை முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தமது மொழிவழிச் சகோதரர்களாகிய தமிழர்களுக்கெதிராக, சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழினப்படுகொலைக்கு உதவினார்கள்.  இலங்கை முஸ்லீம் அரசியல்வாதிகளும், வர்த்தகர்களும் பாகிஸ்தானும், மத்தியகிழக்கு முஸ்லிம் நாடுகளும் இலங்கை இராணுவத்துக்கு உதவிகளைச் செய்யும் வகையில், பேச்சுவார்த்தைகளிலும், தூதுக்குழுக்களிலும் பங்கேற்றனர். முஸ்லீம்கள் தமிழர்களைக் கொலை செய்ததையும், காணிகளை அபகரித்ததையும் மறைத்து, சிங்களவர்களுக்கு ஆதரவாக தமிழர்களுக்கெதிராக பிரச்சார யுத்தத்தை நடத்தி அதில் வெற்றியும் கண்டனர்.

தமிழர்கள் இரத்தம் சிந்தியும், குண்டடிபட்டும், சிறைகளிலும், வதை முகாம்களிலும் அடைபட்டு, பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது இலங்கை முஸ்லிம்கள் தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சிங்களவர்களுக்கு வால் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிங்களவர்களும் தமிழர்களும் அடிபட்டுச் சாகும்போது, அதில் ஆதாய அரசியல் பார்த்தது இலங்கை முஸ்லிம்கள் என்பது கசப்பான உண்மை.

புலிகள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினார்கள்? என்ன காரணத்துக்காக வெளியேற்றினார்கள், எத்தனை பேரை வெளியேற்றினார்கள், எத்தனை முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தார்கள் என்ற உண்மைகளை விட, அந்த விடயத்தை தமிழர்களுக்கெதிரான பிரச்சாரத்துக்காக சிங்களவர்களும் முஸ்லிம்களும் மிகவும் புத்திசாலித்தனமாக உலகளவில் பாவித்துக் கொண்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.. அதே வேளையில், என்ன தான் காரணமாக இருந்தாலும், அந்தச் சம்பவம் ஒரு தவறான முடிவென்பதை ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் தயங்குவதில்லை. அதே வேளையில், இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கவில்லையா?

இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமான முறையில், முஸ்லிம் ஊர்க்காவல் படையினரும், முஸ்லீம் கிராமவாசிகளும்  இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள். அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்க்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்தும் தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதை  UTHR உம்  கூட  விவரமாக  அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இன்றுசில நாட்களுக்கு முன்பாகக் கூட ஏறாவூரில் தமிழர்களின் காணிகளை இராணுவத்தின் உதவியுடன் அபகரித்து, அரபுநாடுகளின் பணத்தில் அரபுக்கல்லூரியைக் கட்டுகிறார்கள் இலங்கை முஸ்லிம்கள்.

உண்மையில் இலங்கை முஸ்லீம்களுக்கு அரசியல், பொருளாதார உரிமை அல்லது நில சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், அதை அவர்கள் சிங்களவர்களுடன் போராடித் தீர்த்திருக்க வேண்டும்.  தமிழர்களுடன் சேர்ந்து ஆயுதமேந்தாது விட்டாலும், ஒரு அமைதிப் பேரணி நடத்தியாவது இலங்கை அரசுக்குத் தமது பிரச்சனைகளை வெளிப்படுத்தியிருக்கலாம். அவர்கள் நடத்திய  ஊர்வலங்கள் எல்லாம் ஒன்று இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்லது அரேபியாவில் ஏதாவதொரு முஸ்லிம் மீது அமெரிக்க குண்டு போட்டதை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைத் தவிர இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனை இருப்பதாகக் கூறி அவர்கள் இலங்கை அரசை ஒரு போதும் எதிர்த்ததில்லை. அதுமட்டுமல்ல, சிங்களவர்கள் தமிழர்களின் உரிமைகளை மறுக்கும் வகையிலும், ஒடுக்குமுறைக்கு உதவும் வகையிலும் சட்டங்களை இயற்றும்போதும் அவற்றிற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவளித்தவர்கள்தான் இலங்கை முஸ்லிம் தலைவர்கள். டக்ளஸ் தேவானந்தாவைப் போல், பெரும்பாலான சிங்களப் பேரினவாத அமைச்சரவைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள்; பேரினவாத செயல்களுக்கு பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசப் பிரதிநிதியாக முஸ்லிம் தலைவர்கள் கலந்திருக்கிறார்கள்.

இப்பொழுது மட்டும் தமிழர்கள்-இலங்கை அரசு பேச்சுவார்த்தையில் தாமும் பங்கு பற்ற வேண்டுமாம். அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் குழந்தைகள் உட்பட தமதின்னுயிரைக் காவு கொடுத்தது,  இவ்வளவு நாளும் தமக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்று சிங்களவர்களுக்கு ஒத்து ஊதிய இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளவா?

சிங்களவர்கள் இப்பொழுது தமிழர்களை நலிவடையச் செய்து பணிய வைத்து விட்டார்கள். அடுத்தது முஸ்லிம்களுக்கும் தமிழர்கள் கதி ஏற்படும், அப்பொழுது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நலிய வைத்ததன் விளைவை இலங்கை முஸ்லீம்கள் உணர்வர்.

இதற்கு முன்னால் 2006 இலும் இலங்கை முஸ்லீம்கள் தருணம் பார்த்துப் பேச்சுவார்த்தையில் பங்கு கேட்டனர். அப்பொழுதே ஜனாதிபதி ராஜபக்ச சிரித்தபடியே மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் "the Sinhalese would also be asking a separate Sinhala delegation if a Muslim delegation were to be permitted.”  இலங்கை முஸ்லீம்களுக்குப் பிரச்சனையிருந்தால் அவர்களாக சிங்களவர்களுடன் போராடித் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்ல; ஆனால் முஸ்லீம்கள்  தமது  பொருளாதார நலன்களைப் பாதுகாக்க, இலாப நோக்கங்களுக்காக, எப்படியெல்லாம் சிங்களவர்களுக்கு உதவி, தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நலிவடையச் செய்து தமிழர்களின் முதுகில் குத்தினார்கள் என்பதை மானமுள்ள ஈழத்தமிழர்கள்  ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்களனைவரதும் தாயகம் என்பதில் எந்த ஈழத்தமிழனுக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. தமிழர்களும் முஸ்லீம்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக, எந்தவித பாகுபாடுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர். வட கிழக்கு  முஸ்லீம்களின் அரசியல் தலைமை தெற்கில் சிங்களவர்களுடன் வாழும் முஸ்லிம் தலைவர்களினாலும், மலே முஸ்லிம்களினாலும் கைப்பற்றப்பட்டு விட்டதன் விளைவே இலங்கையில் தமிழ்- முஸ்லிம் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும். இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொருளாதார, அரசியல் நலன்கள் தெற்கில் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவாக இயங்கி, தமிழர்களின் முதுகில் குத்தினர்.

இலங்கை முஸ்லிம்களைப் போலல்லாது, ஈழத்தமிழர்கள் முஸ்லீம்களுடன் பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் தவறில்லை. அதனால் பேச்சுவார்த்தையில் தனிப்பட்ட முறையில் பங்கு கேட்பதை விடுத்து, முஸ்லிம்கள் முதலில் ஈழத்தமிழர்களுடன் பேசி, அனைத்து தமிழ்பேசும் மக்களின் ஒருமித்த கருத்தையும் ஒரு குரலில் ஒற்றுமையாக வலியுறுத்த வேண்டுமே தவிர, தமிழர்களின் இரத்தத்தில்,  தமது சுயநல அரசியலைத் தொடர்ந்து நடத்த முயற்சிக்கக் கூடாது.
Pin It